வியாழன், 25 டிசம்பர், 2008

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!


இந்துமதத்தைக் கண்டிக்கும், விமர்சிக்கும் பெரியார் தொண்டர்கள் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பதில்லை என்று தொடர்ந்து திரும்ப திரும்ப பெரியார் இயக்கத்தினரைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பார்கள். நாமும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. பெரியாரும் சரி பெரியாரின் தொண்டர்களும் சரி எந்த மதத்தையும் விமர்சிக்க தயங்கியது இல்லை. ஒவ்வொரு கூட்டங்களிலும் விமர்சித்தே வருகின்றனர். அதோடு பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், மற்ற மற்ற பெரியார் தொண்டர்களும் கீழ்கண்ட நூல்களை வெளியிட்டு மதமூடநம்பிக்கைகளை தோலுரித்துவந்துள்ளனர். வருகின்றனர்.

1.கிருத்துவர்கள் சிந்தனைக்கு -ஜ்யார்ஜ்

2.கத்தோலிக்க மதகுரு ஜீன் மெஸ்லியரின் மரணசாசணம்(மூன்று பாகங்கள்)

3. பைபிளோ பைபிள் – புவனன்

4.குரானோ குரான் –புவனன்

5.இயேசு அழைக்கிறார் –நாத்திகம் இராமசாமி

6. வேதமும் விஞ்ஞானமும் – எஸ்.டி.விவேகி

7.நான் ஏன் கிறித்துவனல்ல –பெட்ரண்ட் ரஸ்ஸல்

இன்னும் இதுபோன்ற நூல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன வாய்ப்புள்ளவர்கள் வாங்கிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

“தமிழ் ஓவியா” வலைப்பூவிலே கிறித்து இஸ்லாம் மதங்களை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளதை, தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் அறிவார்கள். எம்மதமும் சம்மதம் என்று பலரும் சொல்வார்கள். ஏன் என்றால் எல்லா மதத்திலும் மூடநம்பிக்கைகள் நிறைந்து காணப்படுவதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்? ஆனால் எங்களைப் போன்ற பெரியாரின் தொண்டர்களைப் பொருத்தவரையில் எம்மதமும் தேவையில்லை என்றே சொல்லி வருகிறோம்.மக்களுக்கு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் போதிக்கத்தான் மதம் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மதங்கள் மனிதனுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா? ஒவ்வொருவரும் அவரவர்கள் நிலையில் நின்று நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் “இயேசு தான் என்னை ஈராக் மீது போர் தொடுக்கச் சொன்னார்; இயேசுவின் அனுமதியுடன் தான் நான் போர் தொடுத்தேன்” என்று பகிங்கராமாக அறிக்கை விடுகிறார் .அல்லா சொன்னால் என் தாய் இருக்கும் இடத்தில்கூட குண்டு வைப்பேன் என்கிறான் ஒரு இஸ்லாம் பயங்கரவாதி.முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் நீ வண்டியை நிறுத்தாததால் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிகையிலேயே இறந்துள்ளனர் என்று குறைபட்டுக் கொள்கிறார் இந்துமத பயங்கரவாதியான பெண்சாமியாரிணி.இப்படி எல்லா மதங்களும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.

இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?

அந்த வகையில் இன்று இயேசு பிறந்த நாளாம் உலகமே கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டம் பற்றி நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் இயேசு பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? எப்படிப் பிறக்க முடியும்? என்பது போன்ற அய்யங்களுக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் கிருத்துவ மதவாதிகளுக்கு உண்டு. இது குறித்து நீதிமன்றத்தில் எல்லாம் வழக்குகள் நடந்ததுண்டு. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதிரியார்கள் திணறியது கண்டு நீதிபதிகள் அந்த பாதிரியார்களுக்கு ஆறுதல் சொல்லிய நிகழ்ச்சியும் நடந்ததுண்டு.

நாம் தற்போது அதற்குள் போகாமல்,1939 முதல் 1945 வரை பம்பாயில் “இரட்சண்ய சேனை” என்ற மதத்தில் போதகராக இருந்த ஜ்யார்ஜ் அவர்கள் “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” என்ற நூலில் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தை மட்டும் உங்கள் பார்ர்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! தெளியுங்கள்!! உண்மையை உணருங்கள்!!

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!“மத்தேயு: 1:18 முதல் 21 வரை –இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது:அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளை தள்ளி விட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொற்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனுமாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள அய்யப்பட்டாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்று பெயரிடுவாயாக.ஏனெனில் அவர் தமது ஜனங்களின் வாவங்களை நீக்கி இவர்களை இரட்சிப்பார் என்றான். பரிசுத்த மாற்கும்,யோவானும் இயேசு எப்படிப் பிறந்தார் என்பது பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.
ஆனால், பரிசுத்த லூக்கா: 1:26 முதல் 31 வரை காபிரியேல் என்னும் தூதன்,நாசரேத் என்னும் ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு,தேவனாலே அனுப்பப்பட்டான். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க.கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றான். அவளோ இந்த வாழ்த்து எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
தூதன் இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரணைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்றான்.இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வரலாற்றை எழுதிய சுவிசேஷகர்கள் நால்வருள் மாற்குவும், யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாமல் விட்டதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்க்கவோ,கேள்விப்படவோ இல்லையா அல்லது சர்ச்சைக்கு இடமான நிகழ்ச்சியை குறிப்பிடாமல் விட்டார்களா?ஆவியால் கர்ப்பமாமே!குறிப்பிட்ட இரண்டு பேர்களிலும் மத்தேயு கூறுகிறார்.மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. இதையறிந்த யோசேப்பு அவளைத் தள்ளிவி யோசனையாயிருந்தான்;அப்போது ஒரு தூதன் அவனுக்கு சொற்பனத்தில் தோன்றி அவளைசேர்த்துக் கொள்ள அய்யப்பாடாதே என்று கூறியதாகச் சொல்லுகிறார்.ஆனால் லூக்காவோ,

ஒரு தூதன் மரியாளிடமே நேரில் போய் கிருபையை வெற்றவளே வாழ்க என்று சொன்னதாகவும், நீ ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்று கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.மத்தேயு:

ஒரு தூதன் யோசேப்புக்கு சொற்பனத்தில் தோன்றி சொன்னான் என்கிறார்லூக்கா: காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடமே நேரில் சொன்னதாகக் கூறுகிறார்.

தூதன் யோசேப்பிடம் சொன்னது உண்மையா?

தூதன் மரியாளிடம் சொன்னான் என்பது உண்மையா?

சொற்பனத்தில் சொன்னது உண்மையா?

யோசேப்புக்கும், மரியாளுக்கும் உடல் தொடர்பு ஏற்படாத போது பரிசுத்த ஆவியினாலேயே கர்ப்பம் உண்டானதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாயிருக்க முடியும்?யோசேப்பைப் பார்த்து நீ அய்யப்படாதே என்று சொன்னால் சந்தேகப்படும்படியான காரியம் ஏதோ நடந்து விட்டது; அதை மறைப்பதற்குத் தூதனை அனுப்பி கிருபை பெற்றவனே வழ்க, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லி சமாதானப் படுத்துயிருக்கிறதாகத்தான் கொள்ள முடியுமே தவிர பரிசுத்த ஆவி மரியாள் வயிற்றுக்குள் குழந்தையாக நுழைந்து விட்டதாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்? சிந்தியுங்கள்!--------------
ஜ்யார்ஜ் – நூல்: “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” பக்கம்:- 40-41

பெரியார் தொண்டர்கள் கேட்கவில்லை. ஒரு மதபோதகரான ஜ்யார்ஜ் கேட்கிறார்.இறுதியாக அந்நூலின் கடைசியில் அவர் எழுதியுள்ளதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“மதவாதிகள் யாராக இருந்தாலும் மூடநம்பிக்கை வாதிகளே! அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக சிந்தனையாளர்களாக ஆக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடேயே இதை எழுதுகிறேனேயல்லாமல், வேறு யாருடைய மணதையும் புண்படுத்த வேண்டுமெற எண்ணத்தோடல்ல என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக் கொண்டு மிகுந்த வணக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்”----

மேற்படி நூல் :- பக்கம் 49

ஜ்யார்ஜ் அவர்களின் கருத்தின் அடிப்படையிலேதான் நான் இந்த பதிவை பதிவுசெய்கிறேன்.உங்களின் மத எண்ணங்களை கொஞ்ச நேரம் தூர வைத்து விட்டு விருப்பு வெறுப்பில்லாமல் நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.


http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_250.html

0 comments:

கருத்துரையிடுக