ஞாயிறு, 21 டிசம்பர், 2008

சும்மா தமாசு

நகைச்சுவை:கீதையை கல்லூரி மாணவர் எழுதியிருந்தால்....

இவை அனைத்தும் நகைச்சுவைக்கே.....
ஒரு வேலை கீதையை ஒரு கல்லூரி மாணவர் எழுதியிருந்தால்? ஒரு ஜாலி கற்பனை இங்கே.....
------------ --------- --------- --------- --------- -


எதை நீ படித்தாய் ?அதை நீ மறப்பதற்கு...

எதை நீ கவனித்தாய்?அது உனக்கு புரியாமல் இருப்பதற்கு...

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்?
attendance குறையாமல் இருப்பதற்கு...

எந்த பிகரு இன்று உன்னுடையதோ ,
அது நாளை மற்றொருவர் உடையதாகிவிடும்.,
மற்றொருநாள்,
அது வேறொருவர் உடையதாகிவிடும்....
இதுவே காலேஜ் உலக நியதி....

------------ --------- --------- --------- --------- --------


காலேஜ் வாழ்க்கையில் கற்று கொண்டவை,
கண்ணை திறந்து கொண்டே தூங்குவது என்னும் அருட் பெரும் கலை....
வாயை மூடியபடியே பேசும் கலை....
மேட்டரே இல்லாமல் பக்க பக்கமாக எழுதி திருத்துபவரை வெறுப்பேற்றும் கலை....
மேட்டேரே இல்லாமல் கடலை,
காசே இல்லாமல் கான்டீன் உணவு....
வாத்தி என்ன திட்டு திட்டினாலும் சிரித்து கொண்டே இருக்க....ஆகா...இதுவல்லவோ வாழ்க்கை....


------------ --------- --------- --------- --------- --------

வழக்கம் போல சில ஜோக்ஸ்....

ரயிலில் சர்தாரும் மற்றொருவரும்,,,,,

மற்றொருவர்:இது என்ன ஸ்டேஷன்?
சர்தார்:(சீரியஸ் ஆக வெளியே எட்டி பார்த்துவிட்டு,)ரயில்வே ஸ்டேஷன்........

------------ --------- --------- --------- --

கணவன்:எனக்கு ஆபரேஷன் ல ஏதாவது ஆகிடுச்சுனா நீ அந்த டாக்டர் யே கல்யாணம் பண்ணிக்கணும்....
மனைவி:ஏன் அப்படி சொல்லுறீங்க?கணவன்:அவர பழிவாங்க எனக்கு வேற வழி தெரியல அதான்.....


------------ --------- --------- --------- ---

சர்தார் காட்டு வழியே போகும் பொது தொங்கி கொண்டு இருக்கும் பாம்பிடம்.....
சர்தார்:இப்படி தொங்கினால் எல்லாம் வேலைக்கு ஆகாது அம்மாவ காம்ப்ளான் கொடுக்க சொல்லு.....

------------ --------- --------- --------- ----

இந்தியாவை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மூன்று எளிய வழிகள்....
3. விஜயகாந்த் அவர்களை அனுப்பி border இல் உள்ள தீவிரவாதிகளிடம் பேச சொல்லலாம்....

2. பிடிபட்ட தீவிரவாதிக்கு அதிர்ச்சி வைத்தியமாக T.R படத்தை காட்டி ,தீவிரவாதிகள் மத்தியில் பயத்தை உண்டு பண்ணலாம்.....

இது எதுவும் பயன் அளிக்க வில்லை என்றால்,

3. பயங்கரவாதிகளை அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படிக்க சொல்லலாம்....

நன்றி!...
http://coolzkarthi. blogspot. com

....................................................................
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது
...................................................................







0 comments:

கருத்துரையிடுக