வியாழன், 25 டிசம்பர், 2008

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!


இந்துமதத்தைக் கண்டிக்கும், விமர்சிக்கும் பெரியார் தொண்டர்கள் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பதில்லை என்று தொடர்ந்து திரும்ப திரும்ப பெரியார் இயக்கத்தினரைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பார்கள். நாமும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. பெரியாரும் சரி பெரியாரின் தொண்டர்களும் சரி எந்த மதத்தையும் விமர்சிக்க தயங்கியது இல்லை. ஒவ்வொரு கூட்டங்களிலும் விமர்சித்தே வருகின்றனர். அதோடு பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், மற்ற மற்ற பெரியார் தொண்டர்களும் கீழ்கண்ட நூல்களை வெளியிட்டு மதமூடநம்பிக்கைகளை தோலுரித்துவந்துள்ளனர். வருகின்றனர்.

1.கிருத்துவர்கள் சிந்தனைக்கு -ஜ்யார்ஜ்

2.கத்தோலிக்க மதகுரு ஜீன் மெஸ்லியரின் மரணசாசணம்(மூன்று பாகங்கள்)

3. பைபிளோ பைபிள் – புவனன்

4.குரானோ குரான் –புவனன்

5.இயேசு அழைக்கிறார் –நாத்திகம் இராமசாமி

6. வேதமும் விஞ்ஞானமும் – எஸ்.டி.விவேகி

7.நான் ஏன் கிறித்துவனல்ல –பெட்ரண்ட் ரஸ்ஸல்

இன்னும் இதுபோன்ற நூல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன வாய்ப்புள்ளவர்கள் வாங்கிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

“தமிழ் ஓவியா” வலைப்பூவிலே கிறித்து இஸ்லாம் மதங்களை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளதை, தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் அறிவார்கள். எம்மதமும் சம்மதம் என்று பலரும் சொல்வார்கள். ஏன் என்றால் எல்லா மதத்திலும் மூடநம்பிக்கைகள் நிறைந்து காணப்படுவதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்? ஆனால் எங்களைப் போன்ற பெரியாரின் தொண்டர்களைப் பொருத்தவரையில் எம்மதமும் தேவையில்லை என்றே சொல்லி வருகிறோம்.மக்களுக்கு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் போதிக்கத்தான் மதம் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மதங்கள் மனிதனுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா? ஒவ்வொருவரும் அவரவர்கள் நிலையில் நின்று நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் “இயேசு தான் என்னை ஈராக் மீது போர் தொடுக்கச் சொன்னார்; இயேசுவின் அனுமதியுடன் தான் நான் போர் தொடுத்தேன்” என்று பகிங்கராமாக அறிக்கை விடுகிறார் .அல்லா சொன்னால் என் தாய் இருக்கும் இடத்தில்கூட குண்டு வைப்பேன் என்கிறான் ஒரு இஸ்லாம் பயங்கரவாதி.முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் நீ வண்டியை நிறுத்தாததால் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிகையிலேயே இறந்துள்ளனர் என்று குறைபட்டுக் கொள்கிறார் இந்துமத பயங்கரவாதியான பெண்சாமியாரிணி.இப்படி எல்லா மதங்களும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.

இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?

அந்த வகையில் இன்று இயேசு பிறந்த நாளாம் உலகமே கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டம் பற்றி நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் இயேசு பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? எப்படிப் பிறக்க முடியும்? என்பது போன்ற அய்யங்களுக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் கிருத்துவ மதவாதிகளுக்கு உண்டு. இது குறித்து நீதிமன்றத்தில் எல்லாம் வழக்குகள் நடந்ததுண்டு. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதிரியார்கள் திணறியது கண்டு நீதிபதிகள் அந்த பாதிரியார்களுக்கு ஆறுதல் சொல்லிய நிகழ்ச்சியும் நடந்ததுண்டு.

நாம் தற்போது அதற்குள் போகாமல்,1939 முதல் 1945 வரை பம்பாயில் “இரட்சண்ய சேனை” என்ற மதத்தில் போதகராக இருந்த ஜ்யார்ஜ் அவர்கள் “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” என்ற நூலில் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தை மட்டும் உங்கள் பார்ர்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! தெளியுங்கள்!! உண்மையை உணருங்கள்!!

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!“மத்தேயு: 1:18 முதல் 21 வரை –இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது:அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளை தள்ளி விட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொற்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனுமாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள அய்யப்பட்டாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்று பெயரிடுவாயாக.ஏனெனில் அவர் தமது ஜனங்களின் வாவங்களை நீக்கி இவர்களை இரட்சிப்பார் என்றான். பரிசுத்த மாற்கும்,யோவானும் இயேசு எப்படிப் பிறந்தார் என்பது பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.
ஆனால், பரிசுத்த லூக்கா: 1:26 முதல் 31 வரை காபிரியேல் என்னும் தூதன்,நாசரேத் என்னும் ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு,தேவனாலே அனுப்பப்பட்டான். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க.கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றான். அவளோ இந்த வாழ்த்து எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
தூதன் இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரணைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்றான்.இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வரலாற்றை எழுதிய சுவிசேஷகர்கள் நால்வருள் மாற்குவும், யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாமல் விட்டதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்க்கவோ,கேள்விப்படவோ இல்லையா அல்லது சர்ச்சைக்கு இடமான நிகழ்ச்சியை குறிப்பிடாமல் விட்டார்களா?ஆவியால் கர்ப்பமாமே!குறிப்பிட்ட இரண்டு பேர்களிலும் மத்தேயு கூறுகிறார்.மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. இதையறிந்த யோசேப்பு அவளைத் தள்ளிவி யோசனையாயிருந்தான்;அப்போது ஒரு தூதன் அவனுக்கு சொற்பனத்தில் தோன்றி அவளைசேர்த்துக் கொள்ள அய்யப்பாடாதே என்று கூறியதாகச் சொல்லுகிறார்.ஆனால் லூக்காவோ,

ஒரு தூதன் மரியாளிடமே நேரில் போய் கிருபையை வெற்றவளே வாழ்க என்று சொன்னதாகவும், நீ ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்று கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.மத்தேயு:

ஒரு தூதன் யோசேப்புக்கு சொற்பனத்தில் தோன்றி சொன்னான் என்கிறார்லூக்கா: காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடமே நேரில் சொன்னதாகக் கூறுகிறார்.

தூதன் யோசேப்பிடம் சொன்னது உண்மையா?

தூதன் மரியாளிடம் சொன்னான் என்பது உண்மையா?

சொற்பனத்தில் சொன்னது உண்மையா?

யோசேப்புக்கும், மரியாளுக்கும் உடல் தொடர்பு ஏற்படாத போது பரிசுத்த ஆவியினாலேயே கர்ப்பம் உண்டானதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாயிருக்க முடியும்?யோசேப்பைப் பார்த்து நீ அய்யப்படாதே என்று சொன்னால் சந்தேகப்படும்படியான காரியம் ஏதோ நடந்து விட்டது; அதை மறைப்பதற்குத் தூதனை அனுப்பி கிருபை பெற்றவனே வழ்க, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லி சமாதானப் படுத்துயிருக்கிறதாகத்தான் கொள்ள முடியுமே தவிர பரிசுத்த ஆவி மரியாள் வயிற்றுக்குள் குழந்தையாக நுழைந்து விட்டதாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்? சிந்தியுங்கள்!--------------
ஜ்யார்ஜ் – நூல்: “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” பக்கம்:- 40-41

பெரியார் தொண்டர்கள் கேட்கவில்லை. ஒரு மதபோதகரான ஜ்யார்ஜ் கேட்கிறார்.இறுதியாக அந்நூலின் கடைசியில் அவர் எழுதியுள்ளதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“மதவாதிகள் யாராக இருந்தாலும் மூடநம்பிக்கை வாதிகளே! அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக சிந்தனையாளர்களாக ஆக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடேயே இதை எழுதுகிறேனேயல்லாமல், வேறு யாருடைய மணதையும் புண்படுத்த வேண்டுமெற எண்ணத்தோடல்ல என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக் கொண்டு மிகுந்த வணக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்”----

மேற்படி நூல் :- பக்கம் 49

ஜ்யார்ஜ் அவர்களின் கருத்தின் அடிப்படையிலேதான் நான் இந்த பதிவை பதிவுசெய்கிறேன்.உங்களின் மத எண்ணங்களை கொஞ்ச நேரம் தூர வைத்து விட்டு விருப்பு வெறுப்பில்லாமல் நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.


http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_250.html

செவ்வாய், 23 டிசம்பர், 2008

இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.








கலைஞர் அவர்கள் சொன்னது போல் பெரியார் தனது 95 ஆம் வய்தில் தனது சுற்றுப் பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்( 24-12-1973).நாளை தந்தை பெரியார் நினைவு நாள் (24-12-2008). பெரியார் தனது சுற்றுப்பயணத்தைத்தான் நிறித்திக் கொண்டாரே தவிர ,சுற்றுப் பயணத்தில் அவர் விதைத்த விதைகள் இன்று வேரும் விழுதுகளாக வளர்ச்சி பெற்று யாராலும் அசைக்க முடியாதவைகளாக விளங்கி வருகின்றன. தனது கருத்துக்களை புறக்கணித்துவிட்டு இயங்க முடியாத சூழலை உருவாக்கி விட்டுத்தான் பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் கருத்து ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். படியுங்கள்!சிந்தியுங்கள்!! தெளிவு பெறுங்கள்!!!.---------------------------------------
-------------------------------------------------
"வயதில் அறிவில் முதியார் நாட்டின்வாய்மைப் போருக்கு என்றும் இளையார்உயர் எண்ணங்கள் மலரும் சோலைஓதும் இராமசாமி வாழ்க"என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்டதந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.--------------------------------------------------
-----------------------------------
பகுத்தறிவுவாதியின் கொள்கைபேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும்.
தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும்.
மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும்.ஏனெனில், இந்த உலகத்திலிருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர, எந்த உலகமும் தென்படவில்லை.புராணம் தவிர வேறு என்ன ஆதாரம்?இராட்சதர் என்பது சுத்தம்பொய்; ஏனென்றால், “இராட்சதர்” “அசுரர்” என்பவர்கள் இந்தப் பூமியில் இருந்ததாகத்தான்சொல்லப்படுகிறது.
இதற்கும் பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர, எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால், கடவுளுக்கு எதிரி இருக்கமுடியுமா?
பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்யேஜோசியம் என்பதும் பெரும் பொய்; வெறும் ஏமாற்றுதலே ஆகும்.
சகுனம் பொய்.இராகுகாலம், குளிகை, எமகண்டம், நல்லநேரம், கெட்டநேரம், எல்லாம் பொய்; பட்சி சாஸ்திரமும் பச்சை பொய்; நட்சத்திரப் பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப் பலன், வருடப் பலன் என்பவை யாவும் பொய்யே.
மந்திரம் எல்லாம் பித்தலாட்டமே
பல்லி விழும்பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய்; கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல்; காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம், பொய்.எண்ணிக்கையில் மூன்று, பதின்மூன்று, எட்டு, பதினெட்டு எண்ணிக்கைகள் கெட்டவை என்பவை சுத்தம்பொய், இன்னும் இவை போன்ற அநேக காரியங்கம் மூடநம்பிக்கையின் பாற்பட்டதேயாம்.
“கடவுள்” நம்பிக்கையே காரணம்“தெரியாத, புரியாத கடவுளை மனிதன் நம்பித் தான் ஆகவேண்டும்” என்பதான கட்டாயம் ஏற்பட்டு மனிதன் நம்ப ஆரம்பித்ததின் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்பவேண்டியவனாகி விட்டான்.நம்பினதின் பலனாக, பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவைகளுக்குத் தன்னை சரிபடுத்திக் கொள்ளுகிறான்.பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டும்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய்.இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.
-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர்
நன்றி

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

எந்திரலோகத்தில் எமன்

சித்திரகுப்தன்:
பிரபோ! பிரபோ! எழுந்திரியுங்கள் பிரபோ!

எமதர்மன்:
என்னடா சித்திரா?! அதிகாலையில் என்னை எழுப்பாதே என்று உனக்கு எத்தனை முறைதான் கூறுவது!? அடுத்த முறை நீ என்னை எழுப்பினாய் என்றால் உன்னைத் தூக்கி எண்ணையில் போட்டு வறுத்து விடுவேன்.

சித்திரன்:
அதிகாலையா? விளையாடாதீர்கள் பிரபு! நேரம் காலை பத்தைக் கடந்து விட்டது. சூரியர் வேலைக்குச் சென்று ஐந்து மணி நேரம் ஆகப் போகிறது, ஆனால் நீங்கள் இன்னும் கண் விழித்தபாடில்லை. இந்த DTH (Direct to Hell) சேவை வந்ததில் இருந்து நீங்கள் மிகவும் கெட்டுப் போய் விட்டீர்கள். தினமும் இரவில் கண்டகண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு தாமதமாக உறங்கினால், இப்படித்தான் மதி கெட்டுப் பேசுவீர்கள்.

எமதர்மன்:
சரியடா சித்திரா. காலையிலேயே என்னைக் கடுப்பேற்றாதே! எனது நிகழ்ச்சி நிரல் என்ன இன்றைக்கு!? எத்தனை பேரின் உயிர்களை எடுக்க வேண்டும்!?

சித்திரன்:
அதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. தங்களுக்கு ஒரு ஓலை வந்திருக்கிறது.

எமதர்மன்:
ஓலையா!? நானென்ன குடிசையாக் கட்டப் போகிறேன்? எவனடா எனக்கு ஓலை அனுப்பியது!?

சித்திரன்:
எமலோக வங்கியில் இருந்து வந்து உள்ளது.

எமதர்மன்:
கிராதகர்கள்.. நானே iPohone, iPod என்று நவீனமாக மாறி விட்டேன். இவர்கள் இன்னும் இந்த ஓலையப் பிடித்து தொங்கிக் கொண்டு, மற்றவர்களின் உயிரெடுக்கும் என்னையே உயிரெடுக்கிறார்கள். டெக்ஸ்ட் செய்ய மாட்டார்களாமா!? அடுத்த முறை ஓலை அனுப்பட்டும், அவர்களை வைத்துக் கொள்கிறேன். சரி.சரி. எதற்கு இந்த ஒலை!?

சித்திரன்:
தங்களுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கக் கடன் தருகிறார்களாம். எருமையில் உங்களைப் பார்க்க சகிக்கவில்லை என பின்குறிப்பு வேறு இணைத்துள்ளார்கள்.

எமதர்மன்:
வாகனம் வாங்கி…!? தற்பொழுது பெட்ரோல் விற்கிற விலையில் நானும் வாகனம் வாங்கினால், பூலோகத்தில் போய் பிச்சைதான் எடுக்க வேண்டும். இருக்கின்ற மரியாதையையும் நான் இழக்க விரும்பவில்லை. அந்த ஓலையை அப்படியே மடித்து வை. இன்றும் மின்வெட்டு இருக்குமாம். விசிற வைத்துக் கொள்ளளாம், என்ன!

சித்திரன்:
அப்படியே செய்கிறேன் பிரபு! இன்று தங்களின் நீதி விசாரணை பூலோகத்தில். மின் துறை அமைச்சர் ஒருவரின் மீது ஏகப்பட்ட புகார்கள் எனது இமெயில் ஐடிக்கு வருகின்றன.

எமதர்மன்:
அப்படியா? இதை ஏன் எனக்கு முதலிலேயே சொல்லவில்லை?
சித்திரன்:
நீங்கள்தான் நடிகைகள் படம் போட்ட இமெயில் வந்தால் மட்டும் ஃபார்வர்ட் பண்ணச் சொன்னீர்கள். மறந்து விட்டதா?

எமதர்மன்:
சரி,சரி. காலை வாராதே. வா உடனே பூலோகம் கிளம்புவோம். எங்கே எனதருமை எருமை வாகனம்? … ஹே, என்ன சித்திரா அது? எருமையின் கொம்பில் இரண்டு விளக்குகளை கட்டி வைத்துள்ளாய்!?

சித்திரன்:
பிரபோ.. நாம் செல்வதோ பூலோகத்துக்கு. அங்கு மின் வெளிச்சம் இருக்குமோ, இருக்காதோ, யார் கண்டது? அதுவுமில்லாமல், பகலிலேய தறி கெட்டு ஓடும் தண்ணீர் லாரிகளும், மணல் லாரிகளும் நிறைந்த பயங்கர பிரதேசம் அது. அதில் எதாவது ஒன்று நமது எருமையின் மீது மோதி, நம்மையே எமலோகத்துக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது?! அதான் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு விளக்குகளைப் பொருத்தி விட்டேன்.

எமதர்மன்:
அறிவாளியடா நீ. அடுத்த அப்ரைசலில் உன்னை பதவி உயர்த்துகிறேன். சரி, வா கிளம்பலாம்.

– அடுத்த காட்சி பூலோகத்தில், அமைச்சரின் அறையில் –

எமதர்மன்:
என்னடா இது? மணிரத்னம் படக் காட்சி போல ஒரே இருட்டாக உள்ளது. நடுச்சாமத்தில் வந்து விட்டோமோ!?

சித்திரன்:
இல்லை பிரபு. இது மாலைதான். இது அமைச்சரின் பகுதியில் மின்வெட்டு இருக்கும் நேரம். அதனால்தான் இப்படி. அமைச்சர் அதோ தூங்கிக் கொண்டு இருக்கிறார். எழுப்புகிறேன். விசாரிப்போம்.

– சித்திர குப்தன் அமைச்சரை எழுப்புகிறார் –

அமைச்சர்:
யார் நீங்க? என்னோட ரூம்ல என்ன பண்றீங்க?

சித்திரன்:
நான் சித்திர குப்தன். இவர் எமதர்மன். உங்களை நரகத்துக்கு அனுப்புமாறு பூலோகத்தில் இருந்து நிறைய இமெயில்கள் எங்களுக்கு வருகின்றன. அதனால்தான் விசாரிக்க வந்துள்ளோம்.

அமைச்சர்:
என்னிடமே விசாரணையா? இது தலைவருக்கு தெரிந்தால் நடப்பதே வேறு!

எமதர்மன்:
உங்கள் தலைவர் இருட்டில் நடக்க கஷ்டப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். நீர் ஒழுங்காக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும். ஏன் இந்த அளவுக்கு மின்வெட்டு செய்கிறீர்கள்? ஏன் மக்கள் மீது இந்தக் கொலைவெறி?

அமைச்சர்:
கடந்த கழக ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்று பிரச்சாரம் செய்தோம். அதைப் போல இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஒரு பஞ்ச் லைன் வேண்டாமா? ‘கற்கால ஆட்சி’ எனப் பிரச்சாரம் செய்வோம். அதுவுமில்லாம, மக்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க, கழகத்தால் கொண்டு வரப்பட்ட அருமையானத் திட்டம் இந்த மின்வெட்டு. வரலாறு திரும்புகிறது கழக ஆட்சியில்.

எமதர்மன்:
நீர் முதலில் திரும்பி நின்று பதில் சொல்லும். சுவற்றிடம் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

அமைச்சர்:
அப்படியா.. இருட்டுல ஒண்ணும் தெரியல.

சித்திரன்:
இதெல்லாம் வேலைக்காகாது. எப்போது இந்த நிலைமை சரியாகும்? எமதர்மர் வேறு இரவில் ‘எஃப்’ டிவி பார்க்க முடியாமல் சிரமப்படுகிறார்.

எமதர்மன்:
சித்திரா.. இப்படி எக்குத்தப்பாக என்னை மாட்டி விடுவதை முதலில் நிறுத்து.

அமைச்சர்:
இந்த நிலைமையை 2011க்குள் சரி செய்து விடுவோம். அப்படி சரி செய்ய முடியாவிட்டால், மக்கள் மறுபடியும் எங்களுக்கே தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து, இந்த நிலைய சரி செய்ய ஆணையிடுவார்கள்.

எமதர்மன்:
மறுபடியும் கழக ஆட்சியா.. ?! பூலோகம் தாங்காது. நல்ல வேளை, எமலோகத்தில் கழகங்கள் இல்லை. தப்பித்தோம்.

– அமைச்சரின் அறைக்கு வெளியே இருட்டில் ஒளிந்திருந்து பார்க்கும்

விகாந்த், இன்ஸ்டண்ட் அறிக்கை விடுகிறார் –

விகாந்த்:
என்னது எமலோகத்தில் கழகங்கள் இல்லையா? அய்யகோ.. நான் எப்படி அங்கே அரசியல் நடத்துவேன்? கழகங்கள் எதாவது இருந்தாத்தானே, அவங்கள காட்டுத்தனமா திட்டி பொழுதப் போக்கலாம். இல்லன்னா கட்சி வளராதே!? மக்களே.. இதுதான் கழக ஆட்சியின் நிலைமை. பூலோகத்தின் மாறி மாறி கழகங்கள் ஆட்சி செய்து, கேவலம் ஒரு கிளையைக் கூட எமலோகத்தில் துவக்க முடியவில்லை. இதையெல்லாம் மாத்தனும்னா, 2011-ல் என்னை முதலமைச்சராக்குங்கள். இல்லையென்றால், என் படங்கள் மீண்டும் வருமென்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.

– அமைச்சரின் அறையில் –

சித்திரன்:
பிரபோ! சீக்கிரம் தீர்ப்பைச் சொல்லுங்கள். எருமை தலையில் இருக்கும் விளக்கு அணைவதற்குள் எமலோகம் திரும்பியாக வேண்டும் . பதிவு வேறு பெரியதாகி விட்டது. இதை எழுதுபவன், அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல், குழம்பிக் கொண்டிருக்கிறான்.

ஆமா.. என்ன தீர்ப்பு சொல்றதுன்னு எமனுக்கே தெரியல. நீங்க எமனா இருந்த என்ன தீர்ப்பு சொல்வீங்க? ஒரு நாளைக்கு நீங்களும் நாட்டாமையா மாறுங்க, உங்க தீர்ப்புக்காக எமன் பாசக்கயிறுடன் வெயிட்டிங்

நன்றி
http://veerasundar.com/tamil/2008/10/16/enthiralogathil-eman/

சும்மா தமாசு

நகைச்சுவை:கீதையை கல்லூரி மாணவர் எழுதியிருந்தால்....

இவை அனைத்தும் நகைச்சுவைக்கே.....
ஒரு வேலை கீதையை ஒரு கல்லூரி மாணவர் எழுதியிருந்தால்? ஒரு ஜாலி கற்பனை இங்கே.....
------------ --------- --------- --------- --------- -


எதை நீ படித்தாய் ?அதை நீ மறப்பதற்கு...

எதை நீ கவனித்தாய்?அது உனக்கு புரியாமல் இருப்பதற்கு...

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்?
attendance குறையாமல் இருப்பதற்கு...

எந்த பிகரு இன்று உன்னுடையதோ ,
அது நாளை மற்றொருவர் உடையதாகிவிடும்.,
மற்றொருநாள்,
அது வேறொருவர் உடையதாகிவிடும்....
இதுவே காலேஜ் உலக நியதி....

------------ --------- --------- --------- --------- --------


காலேஜ் வாழ்க்கையில் கற்று கொண்டவை,
கண்ணை திறந்து கொண்டே தூங்குவது என்னும் அருட் பெரும் கலை....
வாயை மூடியபடியே பேசும் கலை....
மேட்டரே இல்லாமல் பக்க பக்கமாக எழுதி திருத்துபவரை வெறுப்பேற்றும் கலை....
மேட்டேரே இல்லாமல் கடலை,
காசே இல்லாமல் கான்டீன் உணவு....
வாத்தி என்ன திட்டு திட்டினாலும் சிரித்து கொண்டே இருக்க....ஆகா...இதுவல்லவோ வாழ்க்கை....


------------ --------- --------- --------- --------- --------

வழக்கம் போல சில ஜோக்ஸ்....

ரயிலில் சர்தாரும் மற்றொருவரும்,,,,,

மற்றொருவர்:இது என்ன ஸ்டேஷன்?
சர்தார்:(சீரியஸ் ஆக வெளியே எட்டி பார்த்துவிட்டு,)ரயில்வே ஸ்டேஷன்........

------------ --------- --------- --------- --

கணவன்:எனக்கு ஆபரேஷன் ல ஏதாவது ஆகிடுச்சுனா நீ அந்த டாக்டர் யே கல்யாணம் பண்ணிக்கணும்....
மனைவி:ஏன் அப்படி சொல்லுறீங்க?கணவன்:அவர பழிவாங்க எனக்கு வேற வழி தெரியல அதான்.....


------------ --------- --------- --------- ---

சர்தார் காட்டு வழியே போகும் பொது தொங்கி கொண்டு இருக்கும் பாம்பிடம்.....
சர்தார்:இப்படி தொங்கினால் எல்லாம் வேலைக்கு ஆகாது அம்மாவ காம்ப்ளான் கொடுக்க சொல்லு.....

------------ --------- --------- --------- ----

இந்தியாவை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மூன்று எளிய வழிகள்....
3. விஜயகாந்த் அவர்களை அனுப்பி border இல் உள்ள தீவிரவாதிகளிடம் பேச சொல்லலாம்....

2. பிடிபட்ட தீவிரவாதிக்கு அதிர்ச்சி வைத்தியமாக T.R படத்தை காட்டி ,தீவிரவாதிகள் மத்தியில் பயத்தை உண்டு பண்ணலாம்.....

இது எதுவும் பயன் அளிக்க வில்லை என்றால்,

3. பயங்கரவாதிகளை அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படிக்க சொல்லலாம்....

நன்றி!...
http://coolzkarthi. blogspot. com

....................................................................
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது
...................................................................







வெள்ளி, 19 டிசம்பர், 2008

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்---- 20/12/2008

.....................
சமிபத்தில் குழும மின்னஞ்சல் மூலம் எனக்கு கிடைத்த மின்னஞ்சல் உங்களுக்காக இங்கே பதிக்கிறேன்
.....................


தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத்தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்னஇருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும்அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல்பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும்கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீகஅன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்குஇக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப்பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கட்டுரைகுறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு.கடவுள் பிடிபட்டார்நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல்அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்துசெய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை 'வெளியே தேடாதேஉன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத்தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், 'கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொருமூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றிவருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும்அறிவியலால் 'கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டுவாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்கநம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருதுபாருங்க, அதாங்க கடவுள்!" "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒருபவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?" ஒன்று உள்ளே,இன்னொன்று வெளியே.புறவய உலகத்தின் 'தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில்தோன்றும் 'உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும்முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில்சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் 'கண்டு', பிறகுஅதனை 'விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள்விஞ்ஞானிகள்.•••முதலில் 'படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம்தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள்(Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமானஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்."இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்" என்றுஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ளஇந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப்பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?" என்றுஅப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளானஅப்துல் கலாம் 'அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன்பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம்விசயத்துக்கு வருவோம்.நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதுஇயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவதுபெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில்நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்கதத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகுதூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள்புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை.புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறதுஇயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும்நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும்,கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும்விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையைஅளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிபீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு.இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால்'ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்குஇந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால்அதனை 'கடவுள் துகள்' (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள்விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறியவிழைகிறது.களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!'ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின்கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான்துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின்வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடியவரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத்தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளைஎழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக்கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும்.பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக்'கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பதுஎன்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?" என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பியகேள்விக்கான விடையை, அதாவது 'பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விடமுடியும்.ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒருதுகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்குதோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்துமனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!" என்கிறார்கள்இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்."எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்" என்று கூறும் மதவாதிகளோ,கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், 'அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின்வழியே, 'தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும்,இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடியஅபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிபெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாகவெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள்குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போதுஅவர்களின் கண் முன்னே கடவுள் 'காட்சி' தருகிறார் அல்லது இயேசுஅவர்களுக்குள் 'இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவருகின்றது நரம்பயல் மருத்துவம்."மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக்கட்டுப்படுத்துகின்ற மூளையின் 'டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின்அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால்பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோசம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான 'ஆன்மீக அனுபவங்கள்'ஏற்படுகின்றன" என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர்பெர்சிங்கர்.இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர்,உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்குஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, 'தான்ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால்முதலானோர் 'கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின்'அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்றுகூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக்கூடும் என்கிறார் பெர்சிங்கர்."செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன்ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு,மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் 'ஏசுஅவர் முன் 'தோன்றத்' தொடங்கினார்" என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரிஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்குமட்டும்தான் இத்தகைய 'இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீகசிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய 'உள்காயம்' ஏற்படக்கூடும்."இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் 'டெம்பரல் லோப்' என்றபகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்றமூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மதஉணர்வுகள் பொங்குகின்றன" என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்."ஒருவேளை மூளையில் கடவுள் 'குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God Spot)அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனைகாடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?" என இரு மாதங்களுக்கு முன்சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர்குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களாமதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாகஇங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளைவிரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளைநீங்கள் ஏன் கருதக்கூடாது?" என்று அவர்களை 'சமாதானப்படுத்தினார்'ராமச்சந்திரன். அப்படியொரு 'ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர்தயாரித்தும் விட்டார்.கோவில் கனெக்சன் இல்லாமலேயேகடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர்.மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில்உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்கவல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் 'கவச' சோதனைக்குஉட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்தநபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்குஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளைஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதிஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டைமனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்துவரும் இந்த உளறலைத்தான், 'அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள்கூறுகின்றனர்.தியானத்தில் ஈடுபடும்போது, 'தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன்இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்குஉட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீதுமட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்தபிரக்ஞையை வழங்குகின்ற 'பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவேஇவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவுஅலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திரஉச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் 'அமானுஷ்யமானவை'என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு(அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும்,கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட 'ஆன்மீகஅனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும்டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்றமாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று 'ஆன்மீக மூலக்கூறு' என்ற தனதுநூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள்துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், 'இறைநரம்பியல்' (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டதுஅறிவியல்.எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள்மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரைபோன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றிவிடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும்மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத 'பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள்என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது" என்பதையே இந்த ஆய்வுகள்நிறுவுகின்றன.ஏசு இறங்கினாரா?எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும்சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல்ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும்உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறுமொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக்கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையைவரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும்முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசுஎனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம்சொல்லுங்களேன்" என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம்.இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒருஅறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்தகன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.பொருளும் சிந்தனையும்:புரட்சி எனும் ஹைட்ரான் கொலைடர்!இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல்சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மதநம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள்உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப்புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து 'கடவுளை' அகற்ற முடியும்என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு,மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும்,மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் 'சோதனையும்'ஒப்பீட்டளவில் கடினமானவை.உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும்மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும்விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால்ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழஅமிழ்த்துகிறது.எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத்துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில்ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்குவிவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில்மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், 'கல்விச் சுதந்திரம்' என்றபெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.'டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக்கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர்,புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப்போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்துஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும்,உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்றநிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக்கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து,செப், 18).விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக்கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளிமாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல்குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ளகுரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?" என்று 1860 ஆம் ஆண்டில்டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியைமீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச்சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக்கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ்பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்."அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்குஎடுத்துக் கொள்ள வேண்டுமா?" என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர்.இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும்.அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வைவளர்வதற்கும் கூட அதுதான் வழி.

புதிய கலாச்சாரம், அக்'08 இதழிலிருந்து.............

நன்றியுடன் வினவு...........

வியாழன், 18 டிசம்பர், 2008

பெரியாரின் சர்வாதிகாரம் எதற்குப் பயன்பட்டது?

பெரியாரின் சர்வாதிகாரம் எதற்குப் பயன்பட்டது?
நான் ஏறக்குறைய சுமார் 50- ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத"கீழ்மக்கள்"-பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டங் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன்.என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

------------- 10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"

படித்தது http://thamizhoviya.blogspot.com/
இனைப்பு http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_17.html


நன்றி

..........


வணக்கம்

வணக்கம்
இணையத்தளங்களில் நான் படித்தவற்றில் பிடித்ததை இங்கே பதிக்கிறேன் . எங்கே படித்தேன் என்பதற்க்கான இனைப்பையும் இனைத்திருப்பேன்
இதில் வருபவை எல்லாம் மற்றவர்களின் கருத்துக்களும் எழுத்துக்களுமே தவிற என்னுடையவை அல்ல.
நன்றி

“ராமன் கடவுளா? மனிதனா?

“ராமன் கடவுளா? மனிதனா?
கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.”
என்று கவிஞர் வைரமுத்து பாபர் மசூதி இடிப்பதற்கு முன் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் பார்ப்பனர்கள் நிறைந்த சபையில் இப்படி பேசினார். அதில் உள்ள தர்க்கம் ரசிக்கும்படி இருந்தது. உடனே வைரமுத்துவோட ஆபாச பாடல்களை நீங்கள் ஆதரிக்கிறீங்களா?’ என்று கேட்டு விடாதீகள். அதை எவனாவது ஆதரிப்பானா?
ராமன் கடவுளா? மனிதனா? என்கிற இந்த சந்தேகம் வைரமுத்துவிற்கு மட்டுமல்ல. ராமனுக்கே இருந்திருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்:
“ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை.”
இயேசுவை கடவுளாக பலர் வழிபட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான்.
ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிபிடுகிறார்:
“நான் என்னை ஒரு மனிதனாக, தசரதரின் மகன் ராமனாகக் கருதுகிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன் என்றும் கூறுங்கள்”
ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்துபோன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்களை பார்த்து, ‘நான் யார்?’ என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிபெரும் கடவுள்.
“கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார். ………………………………………………..
அருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத் தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.
சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக் கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
‘எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன்’, என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வாலியை கொன்று இருக்கிறான் ராமன்.
அதை நிகழ்கால சம்பவங்களோடு பொறுத்திச் சொல்லவேண்டும் என்றால், ‘எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உதவிகள் வேண்டுமானலும் செய்கிறேன்’ என்று அமெரிக்கா இந்தியாவை நிர்பந்திப்பதுபோல.
நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவுப்டுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக் கூட கொலைசெய்கிற ராமனின் ‘நடத்தை’, இந்தக் காலத்து அமெரிக்கவை நினைவுப்படுத்துகிறது.
தனது சுயலாபத்துக்காக வாலியை கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபிஷணன் மூலமாக கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாக பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:
“வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். …………………….
நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமாதும் பேடித்தனமானதும்மாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்”
வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்:
” மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம், ராமன் சீதையிடம் நடந்துகொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. …………
ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்தானே அந்த எதிரியைக் கடும்போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவணனைக் கொன்றிடவும் அவனால ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”
ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப்பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது.
ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டுவந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை”
இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.”
சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்தப் பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.
இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார்:
“காட்டுமிராண்டித்தனமானவனைவிட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக்கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது.”
‘ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிகாரன் கதாகாலட்சபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரிலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:
“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”
“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி எனறும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி எனறும் வரையறுக்கப்பட்டது. …………………………………….
காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.
அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ……………………………….
ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். …………………………………………………..
அழகிகளின் மத்தியில் ராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”
‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்….. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.
***
‘ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப் படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான்.’ என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதிதள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரைஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.
“நாட்டு மக்ளின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒருதடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.”
“பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. …………………………………….
அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். …………………
நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். …………………..
உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.”
ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவுக் கேவலமானது.
ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியில் லீலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த ‘அழகி‘களுக்குத்தான் நாம் நன்றி சொல்வேண்டும்.
சம்பூகன் என்னும் ‘சூத்திரனை’ பார்ப்பானுக்காக, பார்ப்பனியத்தை பாதுகாப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த, டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.





படித்தது
http://mathimaran.wordpress.com/

இனைப்பு
http://mathimaran.wordpress.com/2008/12/19/article148/



நன்றி


....